Wednesday, August 22, 2007

வாழ்க பல்லாண்டு !!

I dedicate this post to Pallavi and Sudhir and wish them a fun-filled happy married life. You guys form a great pair! keep smilin ...

இல் வாழ்க்கை துவங்கும் இக்கணத்தில்,
சொல் பலவும் சான்றோர் கூற,
கல் அனைத்து உயர் நற்பண்பும்,
செல் அவ்வழி உன் துணை நெகிழ!!

சுடர்வழி பலர்விழி இணைந்ததன் மூலம்,
இருவழி ஒருவழி ஆகிய இன்று!
தீமைகள் தீர்ந்து நல்வழி நல்க,
தீயின் தூய்மையை வேண்டுகின்றேனே!!

மனமது பரந்தது விரிந்தது அன்று,
குலமது மகிழ்ந்தது இருவரை கண்டு!
வாழ்விது மலர்வது நூறாண்டு என்று
வானத்தின் வயதினை வேண்டுகின்றேனே!!

வேகம் வளர விவேகம் பொழிய,
விழிகள் வியக்க விடியல் பூக்க,
வளமை செழிக்க வேங்கை பிறக்க,
நீரின் பாய்ச்சலை வேண்டுகின்றேனே!!

காலம், சீற்றம், மாயம், சோகம்,
பாலம் இணைக்கும் மனதின் மோகம்,
தீர்ந்தும் அன்பின் கருணை வெல்ல,
நிலத்தின் பொறுமையை வேண்டுகின்றேனே!!

தூசியும் பாசியும் நித்தமும் சேராமல்,
நினைவுகள் நீண்ட நாள் சிரிப்புடன் சிறக்க,
என்றென்றும் நெஞ்சங்கள் காதலில் மகிழ,
காற்றின் புத்துணர்ச்சியை வேண்டுகின்றேனே!!

இல் வாழ்க்கை துவங்கும் இக்கணத்தில்,
சொல் பலவும் சான்றோர் கூற,
கல் அனைத்து உயர் நற்பண்பும்,
செல் அவ்வழி உன் துணை நெகிழ!!


For those who dont have tamil font

3 Comments:

Blogger Anu said...

wow dude and you said tht uve lost it for writing poetry.. well u re trying it in a different language then!! I liked the second para!!! so long I took to read! yappa!!!

5:49 AM  
Anonymous Anonymous said...

hey sravan..great work da..

10:16 AM  
Anonymous Anonymous said...

an endearing gift for your friends. wonderful.

9:49 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home