Friday, February 15, 2008

RadhaKrishna


மானாட மயிலாட விண்ணோடு முகிலாட
காற்றோடு இலையாட மலரோடு வண்டாட
மதிமயக்கும் மாலையிலே மண்ணுலகம் எழிலாட
தேவர்கள் உளமாறத் துதிபாடிக் கொண்டாட
கருவண்ணன் மணிவண்ணன் கார்குழலில் விளையாட

சலங்கைகள் ஜதியாக புன்னகையே இசையாக
தேன்சுரக்கும் இதழ்களிலே தீங்கனியே சுவையாக
மெல்லிடையே வடிவாக மென்மையெனும் உருவாக

மெய்மறந்து கண்ணனுடன் இசைபாடும் ராதா !
காண்பவர் அனைவரின் உள்ளம்கவ ராதா !!